நெல்லையில் பலத்த மழை: பள்ளிக்குள் வெள்ளம்- மாணவிகள் அவதி
நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் தென்காசியில் பள்ளிக்குள் வெள்ளம் புகுந்ததால் மாணவிகள் பெரும் அவதிப்பட்டனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த 5 தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில், தென்காசியில் கன மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளநீர் புகுந்தது.
பள்ளி சற்று தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மழை நீர் வடிகால் அமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து 8 மாதங்கள் ஆகியும் இதுவரை அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
இதனால் 2,100 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் மழை நீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில் 24 வகுப்பறைகள் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கன மழையால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு:
நெல்லையில் பெய்த கனமழைக்கு ஒரே நாளில் மணிமுத்தாறு அணை 3 அடி உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 78 மி.மீ மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு,
செங்கோட்டை-78, அம்பாசமுத்திரம்-40, நாங்குநேரி-28, பாளையங்கோட்டை-28.2, ராதாபுரம்-50, சங்கரன்கோவில்-57.3, தென்காசி, சிவகிரி-65.2, திருநெல்வேலி-12.2, ஆலங்குளம்-17.34 என பதிவாகியுள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைபகுதிகளில் விடிய விடிய மழை பெய்ந்துள்ளதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணையில் 119.80 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 120.50 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 1,698 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 749 கன அடி தண்ணீர் திறநது விடப்படுகிறது.
மேலணையில் 68 மீ.மீ, கீழணையில் 56 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 20 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 71 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அணைக்கு விநாடிக்கு 27.73 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடனாநதியில் 52 மி.மீ, ராமநதியில் 17 மி.மீ, கருப்பாநதியில் 35 மி.மீ. குண்டாறில் 12 மி.மீ, அடவிநாயினார் அணையில் 31 மீ.மீ, நம்பியாறில் 10 மி.மீ, கொடுமுடியாறில் 20 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications