இந்தியா, சீனாவில் பணியாளர்களை அதிகரிக்கும் ஐபிஎம்
வாஷிங்டன்: ஐபிஎம் நிறுவனம் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள தனது பணியாளர்களை அதிகரிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது.
இந்தியா மற்றும் சீனாவில் தகவல் தொழில்நுட்ப சந்தை வெகு வேகமாக வளர்ந்து வருவதால் இந்த இரு நாடுகளிலும் உள்ள தனது பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த இரு நாடுகள் மட்டுமல்லாது பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளிலும் தனது பணியாளர் பலத்தை அதிகரிக்க ஐபிஎம் திட்டமிட்டுள்ளது.
2006ம் ஆண்டு இறுதியில், உலகம் முழுவதும் புதிதாக 3.55 லட்சம் பணியாளர்களை ஐபிஎம் வேலைக்கு எடுத்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணியாளர் எண்ணிக்கையை 85,000லிருந்து 1 லட்சமாக அதிகரிக்க ஐபிஎம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் ஐபிஎம் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 73,000 ஆக உயரும். கடந்த ஆண்டு இது 52,000மாக இருந்தது. சீனாவில் இந்த எண்ணிக்கை 13,000ஆக இருக்கும். கடந்த ஆண்டு இது 10,000 ஆக இருந்தது.