நாடாளுமன்றம், தாஜ்மஹால், உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: நாடாளுமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், தாஜ்மஹால் ஆகியவற்றை வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப் போவதாக அல் கொய்தாவிடமிருந்து இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளதாக டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு ஒரு இ மெயில் வந்துள்ளது. அதில், டெல்லி உயர்நீதிமன்றம், நாடாளுமன்றம், தாஜ்மஹால் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அல் கொய்தா அமைப்பிலிருந்து இந்த இ மெயில் வந்துள்ளது.
இந்தத் தகவல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்குத் தெரிவிக்ப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற துணைப் பதிவாளர் கிரீஷ் சர்மா கூறியுள்ளார். 2 வாரங்களுக்கு முன்பு இந்த இ மெயில் வந்ததாம்.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை ஆணையர் தாட்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நீதிமன்ற அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார். நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீஸ் ஹஸாரி நீதிமன்றம் உள்ளிட்ட டெல்லியில் உள்ள பிற நீதிமன்றங்களிலும் கூட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் தவிர டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும் கூட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications