மரண தண்டனையே தேவையில்லை: கருணாநிதி
சென்னை: மரண தண்டனை வேண்டாம் என்பதே எனது கருத்து. மரண தண்டனைக்கு எதிரானவன் நான் என்று என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
டெல்லி சென்றிருந்த முதல்வர் கருணாநிதி நேற்று சென்னை திரும்பினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கருணாநிதி கூறுகையில், தமிழகத்தின் மின் பற்றாக்குறை குறித்த விவரங்களை மத்திய அரசிடம் தெரிவித்து, 500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்ேதன்.
இதை பரிசீலித்த மத்திய அரசு உடனடியாக 300 மெகாவாட் மின்சாரத்தை விடுவிப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், மத்திய பல்கலைக்கழகம் ஒன்றையும், இந்திய நிர்வாகவியல் கழகத்தையும் நிர்மாணிக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது.
11வது திட்ட காலத்தில், தமிழக அரசின் திட்டங்களுக்கு ரூ. 85 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம்.
முல்லைப் பெரியாறு:
பிரதமரின் யோசனையின்பேரில் எனக்கும், கேரள முதல்வர் அச்சுதானந்தனுக்கும் இடையே, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது.
அணையில் நீர்க்கசிவு ஏற்படுவது குறித்து கேரள தரப்பு பெரிதாக கவலை தெரிவித்தது. இதையடுத்து, அணையில் ஏற்படும் நீர்க் கசிவு குறித்து தமிழகம் மற்றும் கேரளா அல்லாத பிற மாநில பொறியாளர் குழுவை அமைத்து ஆராயலாம் என்ற யோசனையை நான் கேரள முதல்வரிடம் தெரிவித்தேன். அதை அவரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
மத்திய நீர் ஆணையம் மூலம் இந்த நடுநிலையான பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும். இது ஒரு முன்னேற்றமான நடவடிக்கை.
முதலில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு செல்ல நான் தயக்கம் காட்டினேன். கடந்த காலங்களில் நடந்த பேச்சுக்களால் எந்தப் பலனும் ஏற்படாததே எனது தயக்கத்திற்குக் காரணம். ஆனால் பிரதமர் வேண்டுகோளின்படியே இந்த பேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டேன்.
மரண தண்டனைக்கு எதிர்ப்பு:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதிக்க தேதி குறிப்பிட்டுள்ளது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.
எனது பொதுவான கருத்து மரண தண்டனையே வேண்டாம் என்பதுதான். அதை நான் ஒருபோதும் ஏற்றவன் இல்லை. இதை பலமுறை சொல்லியுள்ளேன்.
புலிகளுக்கு நான் ஆதரவா?:
விடுதலைப் புலிகளுக்கு நான் தொடர்ந்து ஆதரவு தருவதாக இப்போது கூறி வரும் ஜெயலலிதா, அவரே சில காலத்திற்கு முன்பு கொடுத்த பேட்டியை படித்துப் தெளிந்து கொள்ளலாம்.
அந்தப் பேட்டியில், நானோ அல்லது எம்.ஜி.ஆரோ கொடுத்த ஆதரவில் ஒரு துளியளவு கூட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கருணாநிதி ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. இதிலிருந்ேத அவருடைய புகாருக்குரிய பதிலைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நக்சலைட்டுகளின் ஊடுறுவல் தேனி வரை மட்டுமே வந்துள்ளது. அதையும் கூட நாங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டோம்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம், ஆதிக்கம் மிகவும் குறைவு.
நெல்லுக்கு ஆதார விலை:
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1000 குறைந்த பட்ச ஆதரவு விலை தர வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு தனது இயலாமையை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இரு முறை ஊக்கத் தொகையைக் கூட்டி தற்போது குவிண்டாலுக்கு ரூ. 825 கொடுத்து வருகிறது என்றார் கருணாநிதி.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications