கொத்தனார் கொலை: கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது
நாகர்கோவில்: தொழிலாளியை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மயிலோடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன். கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மனோகரனுக்கும் பரம்பையை சேர்ந்த லலிதா என்ற பெண்ணுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் மனோகரன் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் லலிதாவிடம் விசாரணை நடத்தினர். லலிதாவுக்கும் சாக்கியன்கோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கும் பல ஆண்டுகளாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. அதோடு அவர் மனோகரனிடமும் தொடர்பு வைத்திருந்தார்.
வெளிநாடு போயிருந்த ஸ்ரீகாந்த் ஊருக்கு வந்திருந்தார். அப்போது லலிதாவின் கணவர் வெளியூருக்கு சென்றதை அறிந்து, உல்லாசமாக இருக்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு ஸ்ரீகாந்தும் லலிதாவும் உல்லாச போதையில் இருந்தனர்.
அந்த சமயத்தில் மனோகரன் அங்கு வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஸ்ரீகாந்த் கோபமடைந்தார். ஆத்திரத்தில் பாய்ந்து வந்தவர் அங்கிருந்த கத்தியால் மனோகரனை வயிற்றில் சராமரியாக குத்தினார். அப்படியும் ஆத்திரம் தீராததால் அவரது கழுத்தையும் அறுத்தார்.
பின்னர் தனது நண்பர் சசிகுமார் மற்றும் லலிதா ஆகியோரின் உதவியுடன் உடலை ஒரு சாக்கில் கட்டி 4 கி.மீ. தொலைவில் உள்ள தோட்டத்தில் கொண்டு போய் புதைத்தனர்.
கத்தி மற்றும் ரத்தம் படித்த துணிகளை அருகில் உள்ள குளத்தில் வீசினர். போலீசார் கத்தி மற்றும் தூணிகளை கைப்பற்றினர். லலிதா, சசிகுமார், ஸ்ரீகாந்த ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications