பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் மீது பஸ் மோதியதில் இருவர் பலி
பழநி: பழநிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பஸ் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பழநியில் துவங்க இருக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்வார்கள்.
மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளத்தை சேர்ந்த முருக பக்தர்கள் சுமார் 30 பேர் பழநிக்கு பாத யாத்திரையாக வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் பழநி அருகேயுள்ள சத்திரப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, திருநெல்வேலியில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில் பலர் தப்பி ஓடினர். ஆனால் பாதயாத்திரை சென்ற கண்ணையா, விருமாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். பாதயாத்திரை சென்றவர்கள் மீது பேருந்து மோதியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications