அடுத்த பிரதமர் நான்தான் - மாயாவதி
வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எனது தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றும். அப்போது நான் பிரதமாரக பதவி ஏற்பேன். அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக எனது கட்சியை மாறுபட்ட அடையாளத்துடன் கூடிய அகில இந்திய கட்சியாக உருவாக்க பாடுபட்டு வருகிறேன். அரசியல் ரீதியாக தீவிரமாக செயல்பட்டு வரும் மாநில கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். இந்த மாநில கட்சிகள் எனது கவுரவமான கூட்டணி கட்சிகளாக இருக்கும்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தலித், பிராமணர், சிறுபான்மையினர் ஆகியோரின் ஆதரவை ஒருசேரப் பெற்று ஆட்சியைப் பிடித்தேன். அதே பாணியை நாடு முழுவதும் பின்பற்றி, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பேன். சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்வதில் எந்த கஷ்டமும் கிடையாது.
பிராமணர்கள் எங்களுக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆட்சியில் இடமளிக்க தலித்துகள் தயாராக இருக்கின்றனர்.
காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் பிரித்தாளும் அரசியலால் தலித்துகளுக்கு எந்தவித பயனும் ஏற்படாது. இதை தலித்துகளுக்கு உணர்த்த எங்கள் கட்சி முயன்று வருகிறது எனக் கூறியுள்ளார் மாயாவதி.