For Daily Alerts
Just In
வளைகுடாவில் கால் பதிக்கும் ஜெட் ஏர்வேஸ்
துபாய்: இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை வளைகுடா நாட்டிலும் துவங்க உள்ளது.
350க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கிவரும் ஜெட் ஏர்வேஸ் 2008 ஜனவரி 5ம் தேதியிலிருந்து தனது வளைகுடா சேவையை தொடங்கவுள்ளது.
கொச்சியில் இருந்து குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகளுக்கும், டெல்லியிலிருந்து குவைத்துக்கும், மும்பையிலிருந்து பஹ்ரைன் மற்றும் கத்தாருக்கும், கோழிக்கோட்டிலிருந்து கத்தார் மற்றும் ஓமன் நாடுகளுக்கும் விமானங்களை இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்தும் விமான சேவை துவங்க ஜெட் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, December 26, 2007, 12:20 [IST]