மேற்கு வங்கத்தில் தஸ்லிமாவுக்கு மத்திய அரசு பாதுகாப்பு-பிரணாப்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவில் தங்கியிருந்த அவருக்கு அங்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது டெல்லியில் தஞ்சம் புகுந்துள்ளார். இந் நிலையில் பெங்களூர் வந்த பிரணாப் முகர்ஜி நிருபர்களிடம் பேசுகையில்,
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசு, தஸ்லிமா எப்போது வேண்டுமானாலும் கொல்கத்தா திரும்பலாம். ஆனால் அவருக்கு மத்திய அரசுதான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க அரசு தஸ்லிமாவுக்கு பாதுகாப்பு உதவி கேட்பதை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும். தனி ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பது அந்தந்த மாநில அரசின் பொறுப்பாகும். இருப்பினும் தஸ்லிமா விவகாரத்தில் மேற்கு வங்க அரசுக்கு ஒத்துழைக்க மத்திய அரசு தயார் என்றார்.












Click it and Unblock the Notifications