காஞ்சிபுரத்தில் அரிசி மில் உரிமையாளர் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று காலையில் தனியார் அரிசி மில் உரிமையாளர் கண்ட துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை காப்பாற்ற வந்தவர் படுகாயம் அடைந்தார்.
தனியார் அரிசி மில் உரிமையாளரான பரமசிவம் (55) இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இருவர் பரமசிவத்தை வழிமறித்து அரிவாள்களால் வெட்டினர்.
அப்போது அந்த வழியாக வந்த துரை என்பவர் பரமசிவத்தை காப்பாற்ற முயன்றார். ஆனால் கொலை வெறிக் கும்பல் துரையையும் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியது.
பலத்த காயமைடந்த பரமசிவத்தை போலீசார் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செனறனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார். துரை பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி பெரியய்யா சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். போலீசார் தனிப் படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.