போலிச் சாமியார் ஆசிரமத்தில் வாலிபர் நரபலி?
சென்னை: போலிச் சாமியார் பழனிச்சாமியின் ஆசிரமத்தில் வாலிபர் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகீரதி நகரில் ஆசிரமம் நடத்தி வருபவர் பழனிச்சாமி. சந்திரா, மணிமேகலை, டாக்டர் திவ்யா ஆகிய 3 பேரை திருமணம் செய்த இவர் மீது முதல் மனைவி சந்திரா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் அவர் அளித்த புகாரில், எனது கணவர் குறி சொல்வதாக கூறி ஏராளமான பெண்களின் கற்பை சூறையாடியுள்ளார் என்று கூறியிருந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பழனிச்சாமியை கைது செய்தனர்.
இவர் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இவரது ஆசிரமத்தில் வேலைபார்த்து வந்த ராகுல் என்ற வாலிபர் சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தது தெரியவந்துள்ளது. அவர் நரபலி கொடுக்கப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதையடுத்து பழனிச்சாமியை போலீஸ் காவலில் வைத்து விசாரிபக்க ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications