பொம்மை துப்பாக்கியால் இந்தியரின் கண்ணில் சுட்ட 2 குவைத் வாலிபர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
குவைத்: இந்தியரை பொம்மை துப்பாக்கியால் சுட்டு கண்களை காயப்படுத்திய 2 வாலிபர்களை குவைத் போலீசார் கைது செய்துள்ளனர்.
குவைத்தில் 2 வாலிபர்கள் பொம்மை துப்பாக்கியுடன் ஒரு இந்தியரை வழி மறித்து அவரது கண்ணில் சுட்டனர். இதில் அவரது கண்ணில் பிளாஸ்டிக் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அந்த வாலிபர்கள் காரில் தப்பினர்.
துடிதுடித்த அந்த இந்தியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரின் பதிவு மூலமாக அந்த வாலிபர்களை அடையாளம் கண்ட போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இந்த இருவரும் குவைத்தியர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications