ஆந்திர சாலை விபத்தில் 6 பெண்கள் உட்பட 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில் நடந்த ெபரும் சாலை விபத்தில் 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம், நெல்லூர் அருகே மரிப்பாடு என்ற இடத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் எதிரில் வந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் சென்ற 6 பெண்கள், 3 குழந்தைகள், 4 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
வேனில் இருந்தவர்கள் அனைவரும் கர்னூல் மாவட்டம், ஜமலதுர்கா என்ற இடத்திலிருந்து குச்சிரெட்டிபாளைத்திற்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications