வலி இல்லாமல் நவீன முறையில் கருக்கலைப்பு!!
சேலம்: வலியே இல்லாமல் நவீன முறையில் கருக்கலைப்பு செய்யும் சிகிச்சை முதல் கட்டமாக அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் 385 மையங்களில் அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்து மாநில நல்வாழ்வுத்துறை இயக்குனர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அரசு மருத்துவமனைகளில் இப்போதுள்ள கருக்கலைப்பு முறையில் அதிக வலியும், ரத்தப்போக்கும் ஏற்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெறாதவர்களிடம் கருக்கலைப்பு செய்து கொள்வதால் பண விரயம் ஆவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகிறது.
இதனால், இப்போது தமிழகத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்.வி.ஏ. என்ற நவீன முறையில் கருக்கலைப்பு சிகிச்சை முறை அமல்படுத்தப்படுகிறது.
எம்.வி.ஏ. என்ற சிரிஞ்சு மூலம், கர்ப்பப் பையில் காற்றை செலுத்தி, 10 நிமிடத்தில் கருக்கலைப்பு செய்ய முடியும். சிகிச்சை முடிந்த 1 மணி நேரத்தில் வழக்கமான வேலைகள் செய்யலாம்.
முதல் கட்டமாக, 2008 ஜனவரி முதல் 385 ஆரம்ப சுகாதார மையங்களில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications