For Daily Alerts
Just In
புத்தாண்டு, பொங்கல்-திருச்செந்தூர் நடை திறப்பு நேரம் மாற்றம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில் நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் இணை ஆணையர் ராமராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1ம் தேதியும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தன்றும் அதிகாலை நடை திறக்கப்படும். அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூபமும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். பின்னர் தொடர்ந்து வழக்கமான மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
ஜனவரி 22ம் தேதி தைப்பூச திருநாள் அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம் பூஜையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் பின்னர் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
Story first published: Saturday, December 29, 2007, 15:07 [IST]