For Daily Alerts
Just In
தர்மபுரி அருகே லாரி கவிழ்ந்ததில் 4 பேர் பலி!
தர்மபுரி: தர்மபுரி அருகே லாரி கவிழ்ந்ததில் 4 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டையடுத்த பெரிய மணலியை சேர்ந்தவர் மோகன். அவருக்கு சொந்தமான போர் போடும் ரிக் லாரி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூருக்கு சென்று விட்டு, நாமக்கல் திரும்பிக் கொண்டு இருந்தது.
அந்த லாரியை ஆத்தூர் அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்த டிரைவர் சின்னதுரை என்பவர் ஒட்டி வந்தார். தர்மபுரி தொப்பூர் கணவாய் அருகே காலை 7 மணியளவில் லாரி ரோட்டோரத்தில் இருந்த இரும்பு கம்பியின் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் போர் போடுவதற்காக பயன்படும் பெரிய இரும்பு குழாய்களுக்கு இடையில் சிக்கிய சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரை சேர்ந்த பன்சிங், ஆத்தூர் கோபாலபுரத்தை சேர்ந்த ஐயப்பன், நாமக்கல், பொட்டணத்தை சேர்ந்த அய்யாவு, சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி டிரைவர் சின்னதுரை தலைமறைவாகி விட்டார்.
Story first published: Monday, December 31, 2007, 13:12 [IST]