சுருக்கெழுத்தாளர் சங்கம் குறைந்த கட்டணத்தில் ஆங்கில பேச்சு பயிற்சி
சென்னை: சென்னை சுருக்கெழுத்தாளர் சங்கத்தில் குறைந்த கட்டணத்தில் ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக சென்னை, தி.நகரில் உள்ள சுருக்கெழுத்தாளர் சங்கம் வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
வரும் ஜனவரி 5ம் தேதி முதல் ஒரு மாதகால ஆங்கில பயிற்சியை தொடங்க உள்ளது. பயிற்சியில் அடிப்படை இலக்கணத்தைத் தவிர வாக்கியம் அமைத்தல், கூட்டு விவாதம், நேர்முகத் திறன், செயற்கை நிகழ்வுகள் போன்றவை கற்றுத் தரப்படும்.
பயிற்சியில் சேர கட்டணம் ரூ.500 மட்டுமே. திங்கள் முதல் சனி வரை காலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சியில் சேர குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடிசைவாழ் மக்கள், அனாதைகள், உடல் ஊனமுற்றோர், விதவைகள், நரிக்குறவர்கள், அரவாணிகள் மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications