டிஜிபி ராஜேந்திரனுக்கு 3 மாத பதவி நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக டிஜிபி ராஜேந்திரனுக்கு மேலும் 3 மாத கால பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிஜிபி ராஜேந்திரன் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி டிஜிபியாக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது.
இருப்பினும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு விரும்பியது. இதற்காக மத்திய அரசின் அனுமதியைக் கோரி கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தை ஏற்ற மத்திய அரசு நேற்று ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு தர அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்று பிற்பகல் மேலும் 3 மாதங்களுக்கு ராஜேந்திரனின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை ராஜேந்திரன் பதவியில் நீடிப்பார்.












Click it and Unblock the Notifications