எம்.ஜி.ஆருக்காக ஒரு வாரம் பொதுக்கூட்டம்-ஜெ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி ஒரு வார காலத்திற்கு பொதுக் கூட்டங்களை நடத்துமாறு அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாளாகும். இதையொட்டி அன்று முதல் 21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கேரளம், ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள், தலைமை தாங்குபவர்கள், பேசுபவர்கள் குறித்த பட்டியலையும் அவர் அறிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம் நடைபெறாத இடங்களில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாட வேண்டும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications