புத்தாண்டில் ஈவ் டீசிங் செய்த லாலு பிரசாத் மகன்களுக்கு தர்ம அடி
டெல்லி:புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பெண்களை கேலி செய்ததாக சிக்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. அவர்களைக் காப்பாற்ற முயன்ற போலீஸ் அதிகாரியின் பிஸ்டலையும், அடித்தவர்கள் பறித்துக் கொண்டு சென்று விட்டனராம்.
தெற்கு டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் லாலுவின் மகன்களான தருண் யாதவ், தேஜ்பால் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த பெண்களை இருவரும் கேலி செய்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய இருவரும் கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் சென்று அங்கும் பெண்களைக் கிண்டல் செய்துள்ளனர்.
இத்தனைக்கும் அவர்களுக்குப் பாதுகாப்பாக சில போலீஸாரும் உடன் இருந்துள்ளனர். அவர்கள், இருவரையும் அடக்க வைக்க முயற்சிக்கவில்ைல என்று தெரிகிறது. லாலு மகன்கள் செய்த சேஷ்டைகளை வேடிக்கை பார்த்தவாறு உடன் இருந்துள்ளனர்.
இரு இடங்களிலும் கேலி செய்து முடித்த பின்னர் டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள சத்தர்பூர் என்ற இடத்திற்கு இருவரும் வந்துள்ளனர். அங்கு நடந்த ஒரு பார்ட்டியில் பங்கேற்றனர்.
பார்ட்டியை முடித்துக் கொண்டு திரும்பி வரும் வழியில், மெஹ்ராலி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் நடந்த பார்ட்டியைப் பார்த்து வண்டியை நிறுத்தி, பார்ட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய பெண்களைப் பார்த்து அசிங்கமாக காமென்ட் அடித்துள்ளனர்.
இதுவரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கேலி செய்து வந்த அவர்களுக்கு மெஹ்ராலியில் வேறு விதமான வரவேற்பு கிடைத்தது. அங்கிருந்த சில இளைஞர்கள் ஒன்று திரண்டு லாலுவின் இரு மகன்களையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
நிலைமை மோசமடைவதைப் பார்த்த பாதுகாப்புக்கு வந்த போலீஸார், இளைஞர்களை விலக்கி விடப் பார்த்தனர். அப்போது அவர்களில் ஒருவரின் பிஸ்டலை, இளைஞர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
முகத்தில் ஏகப்பட்ட காயத்துடன் தருணும், தேஜ்பாலும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்புடன் வீடு போய்ச் சேர்ந்தனர்.
மெஹ்ராலி சண்டையில் பிஸ்டலை தொலைத்த போலீஸ்காரர், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது லாலுவின் மகன்கள் ஈவ் டீசிங் செய்து அடி வாங்கிய சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு லாலுவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, முதல்வர் நிதீஷ் குமார் வீடு அருகே காவலுக்கு இருந்த காவலரை கன்னத்தில் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது அவரது மகன்கள் பெண்களை கேலி செய்து அடி வாங்கி வந்துள்ளனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications