புத்தாண்டில் ஈவ் டீசிங் செய்த லாலு பிரசாத் மகன்களுக்கு தர்ம அடி
டெல்லி:புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பெண்களை கேலி செய்ததாக சிக்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. அவர்களைக் காப்பாற்ற முயன்ற போலீஸ் அதிகாரியின் பிஸ்டலையும், அடித்தவர்கள் பறித்துக் கொண்டு சென்று விட்டனராம்.
தெற்கு டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் லாலுவின் மகன்களான தருண் யாதவ், தேஜ்பால் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த பெண்களை இருவரும் கேலி செய்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய இருவரும் கன்னாட் பிளேஸ் பகுதிக்குச் சென்று அங்கும் பெண்களைக் கிண்டல் செய்துள்ளனர்.
இத்தனைக்கும் அவர்களுக்குப் பாதுகாப்பாக சில போலீஸாரும் உடன் இருந்துள்ளனர். அவர்கள், இருவரையும் அடக்க வைக்க முயற்சிக்கவில்ைல என்று தெரிகிறது. லாலு மகன்கள் செய்த சேஷ்டைகளை வேடிக்கை பார்த்தவாறு உடன் இருந்துள்ளனர்.
இரு இடங்களிலும் கேலி செய்து முடித்த பின்னர் டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள சத்தர்பூர் என்ற இடத்திற்கு இருவரும் வந்துள்ளனர். அங்கு நடந்த ஒரு பார்ட்டியில் பங்கேற்றனர்.
பார்ட்டியை முடித்துக் கொண்டு திரும்பி வரும் வழியில், மெஹ்ராலி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் நடந்த பார்ட்டியைப் பார்த்து வண்டியை நிறுத்தி, பார்ட்டியில் கலந்து கொண்டு நடனமாடிய பெண்களைப் பார்த்து அசிங்கமாக காமென்ட் அடித்துள்ளனர்.
இதுவரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கேலி செய்து வந்த அவர்களுக்கு மெஹ்ராலியில் வேறு விதமான வரவேற்பு கிடைத்தது. அங்கிருந்த சில இளைஞர்கள் ஒன்று திரண்டு லாலுவின் இரு மகன்களையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
நிலைமை மோசமடைவதைப் பார்த்த பாதுகாப்புக்கு வந்த போலீஸார், இளைஞர்களை விலக்கி விடப் பார்த்தனர். அப்போது அவர்களில் ஒருவரின் பிஸ்டலை, இளைஞர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
முகத்தில் ஏகப்பட்ட காயத்துடன் தருணும், தேஜ்பாலும், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்புடன் வீடு போய்ச் சேர்ந்தனர்.
மெஹ்ராலி சண்டையில் பிஸ்டலை தொலைத்த போலீஸ்காரர், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது லாலுவின் மகன்கள் ஈவ் டீசிங் செய்து அடி வாங்கிய சம்பவம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு லாலுவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, முதல்வர் நிதீஷ் குமார் வீடு அருகே காவலுக்கு இருந்த காவலரை கன்னத்தில் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது அவரது மகன்கள் பெண்களை கேலி செய்து அடி வாங்கி வந்துள்ளனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications