ஹஜ் பயணத்தில் 227 இந்தியர்கள் மரணம்
துபாய்: இந்த வருடம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டவர்களில் 227 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து இந்த வருடம் 1 லட்சத்து 57 ஆயிரம் பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் ஹஜ் கமிட்டியின் மூலம் சென்றவர்கள் ஆவர்.
இவர்களில் 227 பேர் ஹஜ் யாத்திரையின்போது மரணமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் விபத்திலும், மீதிப் பேர் இயற்கையாகவும் மரணமடைந்துள்ளனர்.
இந்தப் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் 20,000 பேர் நாடு திரும்பிவிட்டனர். உடல்நலம் சரியில்லாமல் 86 இந்தியர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் மரணமடைந்துள்ளனர். மெக்கா மற்றும் மதினாவில் 337 இந்தோனேசியர்கள் மரணமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 778 விபத்துக்கள் நடந்துள்ளன. மொத்தம் 11,700 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், 10,900 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மீதியுள்ள 800க்கு மேற்பட்டோர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications