தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கும்பகோணம் ராணுவ வீரர் பலி
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் கும்பகோணத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 2 பேர் மரணமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள கூடலூரைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் ஆனந்த்(34). இவர் கடந்த 1996ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும், பாலகுமாரன் என்ற மகனும் உள்ளனர்.
காஷ்மீரில் பணிபுரிந்து வந்த ஆனந்த், எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றபோது, தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார்.
வட மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும் இந்த மோதலில் பலியானார்.
இறந்த ஆனந்தின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.












Click it and Unblock the Notifications