நாளை போலியோ சொட்டு முகாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நாளை 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முதல் கட்ட முகாம் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இதற்காக மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்ளில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2வது கட்டமாக பிப்ரவரி மாதம் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications