For Quick Alerts
For Daily Alerts
Just In
வெனிசுலா விமானம் கடலில் விழுந்து 14 பேர் பலி
காரகாஸ்: வெனிசுலா நாட்டில் பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்ததில் அதிலிருந்த 14 பேர் உயிரிழந்தனர்.
வெனிசுலா நாட்டின், காரகாஸ் நகரில் உள்ள பொலிவர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாஸ் ரோகாஸ் தீவுக்கு அந்த குட்டி விமானம் சென்று கொண்டிருந்தது.
ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரை கட்டுப்பாட்டு நிலையத்துடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் அந்த விமானம் கடலில் விழுந்தது தெரியவந்தது. அதிலிருந்த 14 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
Comments
Story first published: Saturday, January 5, 2008, 12:03 [IST]