முஸ்லீம்களிடம் தஸ்லிமா மன்னிப்பு கேட்க தாஸ் முன்ஷி கோரிக்கை

மால்டா: இந்தியாவில் உள்ள முஸ்லீம்களிடம், தனது சர்ச்சைக்குரிய எழுத்துக்களுக்காக தஸ்லிம் நஸ்ரின் இரு கரங்களையும் கூப்பி, தலை வணங்கி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது பல மதங்களைக் கொண்ட, பல இனங்களைக் கொண்ட நாடு. இங்கு அனைத்து மதங்களும் மதிக்கப்படுகின்றன.
எனக்கு இலக்கியம் பிடிக்கும். தஸ்லிமா நஸ்ரினின் எழுத்தை நான் வெறுக்கவில்லை. ஆனால், ஒரு மத்ததின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அவரது எழுத்துக்கள் இருந்தால், அவமதிக்கும் வகையில் இருந்தால் அதை அனுமதிக்க முடியாது.
அவரது நூலில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் தேவையற்றவை. சல்மான் ருஷ்டியின் நூல் சர்ச்சைக்குரியதாக இருந்ததால், அதை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கவில்லை.
எனவே தனது சர்ச்சைக்குரிய எழுத்துக்களுக்காக இந்திய முஸ்லீம்களிடம், இரு கரம் கூப்பி, தலை வணங்கி தஸ்லிமா மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த நூலிலிருந்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க வேண்டும்.
மேற்கு வங்கத்திற்கு மீண்டும் தஸ்லிமா திரும்புவது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது மேற்கு வங்க அரசின் தலைவலி.
ஆனால் இந்தியாவிலோ அல்லது வேறு ஏதாவது நாட்டிலோ தஸ்லிமா தங்க விரும்புவாரேயானால், முதலில் அந்த நாட்டின் அடையாளம், தத்துவம் ஆகியவற்றை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் முன்ஷி.
மத்திய அரசின் பாதுகாப்பில் டெல்லியில் ஒரு ரகசிய இடத்தில் தஸ்லிமா தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனது நண்பர்களுக்கு தஸ்லிமா அனுப்பிய கடிதத்தில், தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முன்ஷி படு காட்டமாக தஸ்லிமா குறித்து கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications