இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil


ஜகார்தா: இந்தோனேஷியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேஷியா நாட்டில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையில் மேற்கு பபுவா மாகாணத்தின், மனோக்வாரி கடற்கரை பகுதியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் பயங்கரமாக ஆடின. இதில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள மக்கள் பயந்து வீதிகளில் ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. கடலோர பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குறித்து அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு சுமத்ரா தீவு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.0 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+