முதல்வருடன் சிமென்ட் ஆலை அதிபர் சந்திப்பு
சென்னை: சிமென்ட் ஆலைகளை அரசே கையகப்படுத்தும் என முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன இயக்குநர் சீனிவாசன், தனியார் சிமென்ட் நிறுவனங்களின் சார்பில் முதல்வரை சந்தித்து சிமென்ட் விலை குறைப்பு குறித்து பேச்சு நடத்தினார்.
தமிழகத்தில் சிமென்ட் விலை மிக மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் சாமானிய மக்களின் வீடு கட்டும் கனவு மிகப் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. சிமென்ட் விலை உயர்வால் கட்டுமான செலவும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து சிமென்ட் வாங்கப்பட்டு பொது விநியோக முறையில் நுகர்வோர்களுக்கு, அடக்க விலையில் விற்பனை செயய்ப்படும்.
தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்கள் தாங்களாக முன்வந்து விலையைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது ஆலைகளை அரசு கையகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன இயக்குநர் சீனிவாசன் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் சார்பாக அவர் முதல்வரை சந்தித்தார்.
முதல்வரை சந்தித்து விட்டுத் திரும்பிய சீனிவாசன், முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து தனியார் சிமென்ட் உற்பத்தியாளர்களுடன் ஜனவரி 10ம் தேதிக்குள் பேசுவேன். அதன் பின்னர் மீண்டும் முதல்வரை சந்திப்பேன். அப்போது நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறேன் என்றார்.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்












Click it and Unblock the Notifications