For Daily Alerts
Just In
எங்களுக்கென்று தனி கொள்கை - கூறுகிறார் விஜய டி.ராஜேந்தர்
திருநெல்வேலி: திமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கென்று, எங்களது கட்சிக்கென்று தனிக் கொள்கை உள்ளது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் லட்சிய திமுக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர்.
நெல்லை வந்த விஜய டி.ராஜேந்தர் அங்கு கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசினார். அப்போது, எங்கள் கட்சிக்கென தனிக் கொள்கை இருக்கிறது. நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
4 படத்தில் நடித்தவர்கள் எல்லாம் நாளைய முதல்வர் என்று
சொல்லிக் கொள்கிறார்கள்.
பல லட்சம் இளைஞர்களை ஒன்று திரட்டி விரைவில் மாநாடு நடத்த உள்ளேன். வரும் தேர்தலில் எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார் விஜய டி.ராஜேந்தர்.
தனிக் கொள்கை என்று கூறிய விஜய டி.ராஜேந்தர் கடைசி வரை அந்தக் கொள்கை என்ன என்று கூறவே இல்லை.
Comments
Story first published: Tuesday, January 8, 2008, 13:29 [IST]