ரயில்வே அலுவலகங்கள் மீது கன்னடர்கள் திடீர் தாக்குதல்
பெங்களூர்: கன்னடர்களை புறக்கணிக்கும் ரயில்வேயின் போக்கைக் கண்டித்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகத்தின் பல ஊர்களில் ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் மீது கன்னட அமைப்பினர் வெறித்தனமான தாக்குதலை நடத்தினர்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தென் மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 4000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு சமீபத்தில் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் வட மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் சொந்த மாநிலமான பீகாரிலிருந்து அதிகம் பேர் கலந்து கொண்டனர்.
இதற்கு கன்னட ரக்ஷ்ன வேதிகே என்ற கன்னட அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகத்தில் உள்ள வேலைக்கு கன்னடர்களை நியமிக்காமல் பீகார் மாநிலத்தவரை அதிக அளவில் நியமிப்பதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு நடந்த மையங்களுக்குள் புகுந்து சூறையாடினர்.
இந்த நிலையில், நேற்று கன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பைச் ேசர்ந்தவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய அவர்கள் திடீரென ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
அலுவலகத்திற்குள் ஒவ்வொரு அறையாக புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேசை, நாற்காலிகள் உடைக்கப்பட்டன. டியூப் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டடன.
இதேபோல மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள ரயில்வே அலுவலகங்களும் தாக்குதலுக்கு ஆளாகின.
கன்னட அமைப்பின் இந்த வெறித்தனமான தாக்குதலால் பெங்களூரில் பரபரப்பு நிலவுகிறது. ரயில்நிலையங்கள், ரயில்வே அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு சென்னை மத்திய அரசின் கணக்கு தணிக்கை (ஏஜி) அலுவலக ஊழியர்கள் 24 பேர் பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அதையும் எதிர்த்து கன்னடர்கள் போராட்டத்தில் குதித்தனர். பெங்களூர் ஏஜி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களே போராட்டத்தில் ஈடுபட்டதுதான் மிகவும் கொடுமையானது. இறுதியில் அந்த இடமாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரயில் டிக்கெட், பான் கார்டு.. இன்று முதல் மொத்தமாக மாறும் ரூல்ஸ்.. மக்களே இது தெரியாமல் இருக்காதீங்க -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications