சீனா சென்றார் பிரதமர் மன்மோகன் சிங்
பீஜிங்: 3 நாள் சீன பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை பீஜிங் சென்றடைந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கெளர் மற்றும் உயர் மட்டக் குழுவினர் இன்று காலை பீஜிங் வந்தடைந்தபோது அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன துணை வெளியுறவு அமைச்சர் டாய் பிங்காவோ, இரு நாட்டு சிறப்புப் பிரதிநிதிகள், இரு நாட்டு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சீனாவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் மற்றும் இந்திய தூதரக உயர் அதிகாரிகளும், பிரதமரை வரவேற்றனர்.
தனது 3 நாள் பயணத்தின்போது சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ, சீன பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கவுள்ளார்.
இன்று பீஜிங் ஒலிம்பிக் திட்ட கண்காட்சி மையத்திற்கு பிரதமர் செல்கிறார். பின்னர் இந்திய வர்த்தகக் குழுவினரை அவர் சந்திக்கிறார். நாளை முதலீட்டாளர் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
இன்று இரவு சீன பிரதமர் வென் ஜியாபோ, பிரதமருக்கு விருந்தளித்து கெளரவிக்கிறார்.
இரு நாட்டு எல்லைப் பிரச்சினை குறித்து மன்மோகன் சிங்கின் பயணத்தின்போது முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications