தமிழாசிரியர்களுக்கு அரசுப் பணி: திருமாவளவன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil


தூத்துக்குடி: தமிழகத்தில் தமிழ் படித்த 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை வழங்க கோரி சென்னையில் வருகிற 25ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.

தூத்துக்குடி பிரையன்ட் நகரில் பலிடெக்னிக் விரிவுரையாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 203 பகுதி நேர விரிவுரையாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் பணி நிரந்திரம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அமைப்புதான் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இவர்களை பணி நிரந்தரம் செய்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் தமிழ் பயின்ற 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். வணிகவியல், உடற்கல்வியியல் ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். இவர்கள் அனைவரும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரும் ஜனவரி 25ல் போராட்டம் நடக்கிறது. அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கருத்துரிமை மீட்பு மாநாடு நடக்கிறது.

தமிழரின் மரபுரிமை விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழகத்தில் எஞ்சியுள்ள ஒரே பாரம்பரியம் கொண்டது ஜல்லிக்கட்டு. இதற்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு விட்டு தடை விதிருப்பது வேதனைக்குரியது. இந்த தடையை உடைக்க அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+