மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல்-நாமக்கல்லில் பீதி
கொல்கத்தா&நாமக்கல்: மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் உள்பட தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் திடீரென இறந்தன. இதையடுத்து தெற்கு தினஜ்பூர் மாவட்டத்திலும் கோழிகள் பலியாயின.
இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதியானது. இப் பகுதியில் H5N1 என்ற வைரஸ் பறவைகளைத் தாக்கி வருகிறது.
இதையடுத்து இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து கோழிகளையும் கொல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் அவை கொல்லப்படவுள்ளன. சுமார் 8 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக மணிப்பூரிலும் மகாராஷ்டிரத்திலும் கோழிகள் மர்மமாக பலியாகின. இதற்கும் பறவைக் காய்ச்சலே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் கோழி, முட்டை உற்பத்திக்கு பேர் போன நாமக்கல்லில் பீதி பரவியுள்ளது. இங்கும் சேலம் மாவட்டத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான கோழிப் பண்னைகளில் பறவைக் காய்ச்சல் பரவிடாத வகையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப் பகுதியில் கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கோழிப் பண்ணைகளில் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேற்குவங்க கோழிகளுக்கு தமிழகத்தில் தடை:
இந் நிலையில் தமிழகத்துக்கு மேற்குவங்கத்தில் இருந்து கோழி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் இல்லை என்றும் கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications