மருமகளை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய மாமியார் கைது
நெல்லை: பட்டினி போட்டி மனைவியை கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண்ணின் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் பேச்சிகுட்டி. இவரது மனைவி செல்லம்மாள். இவர் நெல்லை சந்திப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்.
எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இதனால் எனது கணவர் பேச்சிகுட்டி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் குடியேறிவிட்டார்.
எனவே கணவர் துணையின்றி மாமியர் வீட்டில் இருக்கும் என்னை மாமனார், மாமியார் முத்தம்மாள், கணவரின் தங்கைகள் மாரியம்மாள், பிரமாச்சி சாப்பாடு கூட கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்தினார்கள்.
பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பெண்ணின் கணவர், மாமியார், மாமனார், கணவரின் சகோதரிகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மாமியார் முத்தம்மாளை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications