தஞ்சையில் அதிமுக அலுவலகம் சூறை-திமுகவினர் மீது வழக்கு
தஞ்சை: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் பொங்கல் விழாவில் மோதல் ஏற்பட்டதால் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக திமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஒரத்தநாடு புதுரை சேர்ந்த இளவரசன் என்பவர் மாட்டை கட்டையால் அடித்தார்.
அந்த அடி அதிமுகவினர் மீது பட்டது. இதனால் அதிமுகவினர் - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்பேது அருகில் இருந்த அதிமுக அலுவலகத்தின் உள்ளே புகுந்த சிலர் உருட்டுக்கட்டை, தடி, அரிவாள் போன்றவற்றால் அந்த அலுவலகத்தை சூறையாடினர். அதிமுக அலுவலகத்தில் இருந்த டிவி, நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டது.
இது குறித்து அப் பகுதி அதிமுக கிளைச் செயலாளர் மாரிமுத்து ஒரத்தநாடு போலீஸில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார், ஒரத்தநாடு யூனியன் தலைவரும், திமுக ஒன்றியச் செலாளருமான காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் சுரேஷ், இளவரசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications