தாறுமாறாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

இந்த பெரும் விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.
இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் பயணிக்கவிருந்த விமானம் உள்பட பல்வேறு விமானங்கள் மிக அருகாமையில் இருந்த நிலையில் விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை (வியாழக்கிழமை) இந்த விபத்து நடந்தது. சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து வந்த அந்த விமானம் தரையிறங்கியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
விமானத்தை ஓடுபாதையில் சரியாக தரையிறக்க விமானி கடுமையாக போராடியும் முடியவில்லை. மிக வேகமாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடு பாதைக்கு முன்பே புல்வெளியில் தரையை தொட்டது.
பின்னர் தாறுமாறாக ஓடிய அந்த விமானத்தின் சக்கரங்கள் உடைந்து விழுந்தன. இடதுபுர இறக்கை உடைத்து. இடதுபுற என்ஜினும் தரையில் உரசியபடி அந்த விமானம் ஓடியது. பின்னர் ஒரு வழியாக ரன்வேயை தொட்டு நின்றது.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் விமானம் தீப் பிடிப்பதை தடுக்க ரசாயனங்களையும் நீைரயும் பீய்ச்சி அடித்தனர்.
விமான சிப்பந்திகள் மிகத் துரிதமாக செயல்பட்டு அதில் இருந்த 136 பயணிகளையும் பத்திகமாக தரையிறக்கினர். விமானம் ஹார்ட் லேண்டிங் ஆனதில் 13 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்துக்கான காரணத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், தீவிரவாத தாக்குதல் ஏதும் இல்லை என்று மட்டும் தெரிவித்துள்ளது.
தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் நின்றுவிட்டதாகவும், சக்கரங்கள் கீழே இறங்கவில்லை என்றும், என்ஜின்களின் செயல்பாடும் நின்றுவிட்டதாகவும். விமானத்தை கிளைடர் போல இயக்கியே அதை தரையிறக்கியதாக விமானத்தை இயக்கிய விமானி கூறியதாக தகவல்கள் வருகின்றன.
இந்த விமானம் நிலை தடுமாறி ஓடியபோது பிரதமர் கார்டன் பிரவுன், தனது மனைவியுடன் இன்னொரு விமானத்தில் பீஜிங் செல்வதற்காக அமர்ந்திருந்தார். மேலும் சில விமானங்களும் விமான நிலையத்தில் பயணிகளுடன் நின்று கொண்டிருந்தன.
தறி கெட்டு ஓடிய விமானம் பிரவுன் இருந்த விமானத்திலோ அல்லது வேறு விமானங்கள் மீதோ மோதியிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
இதன் காரணமாக ஹீத்ரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் புறப்படுவது சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. ஹீத்ரூ விமான நிலையத்திற்கு வந்த சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
சில மணி நேர தாமதத்திற்குப் பின்னர் கார்டன் பிரவுன் சீனா புறப்பட்டுச் சென்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications