தாறுமாறாக தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்

இந்த பெரும் விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.
இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் பயணிக்கவிருந்த விமானம் உள்பட பல்வேறு விமானங்கள் மிக அருகாமையில் இருந்த நிலையில் விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை (வியாழக்கிழமை) இந்த விபத்து நடந்தது. சீனத் தலைநகர் பீஜிங்கிலிருந்து வந்த அந்த விமானம் தரையிறங்கியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
விமானத்தை ஓடுபாதையில் சரியாக தரையிறக்க விமானி கடுமையாக போராடியும் முடியவில்லை. மிக வேகமாக தரையிறங்கிய அந்த விமானம் ஓடு பாதைக்கு முன்பே புல்வெளியில் தரையை தொட்டது.
பின்னர் தாறுமாறாக ஓடிய அந்த விமானத்தின் சக்கரங்கள் உடைந்து விழுந்தன. இடதுபுர இறக்கை உடைத்து. இடதுபுற என்ஜினும் தரையில் உரசியபடி அந்த விமானம் ஓடியது. பின்னர் ஒரு வழியாக ரன்வேயை தொட்டு நின்றது.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் விமானம் தீப் பிடிப்பதை தடுக்க ரசாயனங்களையும் நீைரயும் பீய்ச்சி அடித்தனர்.
விமான சிப்பந்திகள் மிகத் துரிதமாக செயல்பட்டு அதில் இருந்த 136 பயணிகளையும் பத்திகமாக தரையிறக்கினர். விமானம் ஹார்ட் லேண்டிங் ஆனதில் 13 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்துக்கான காரணத்தை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், தீவிரவாத தாக்குதல் ஏதும் இல்லை என்று மட்டும் தெரிவித்துள்ளது.
தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் அனைத்து செயல்பாடுகளும் நின்றுவிட்டதாகவும், சக்கரங்கள் கீழே இறங்கவில்லை என்றும், என்ஜின்களின் செயல்பாடும் நின்றுவிட்டதாகவும். விமானத்தை கிளைடர் போல இயக்கியே அதை தரையிறக்கியதாக விமானத்தை இயக்கிய விமானி கூறியதாக தகவல்கள் வருகின்றன.
இந்த விமானம் நிலை தடுமாறி ஓடியபோது பிரதமர் கார்டன் பிரவுன், தனது மனைவியுடன் இன்னொரு விமானத்தில் பீஜிங் செல்வதற்காக அமர்ந்திருந்தார். மேலும் சில விமானங்களும் விமான நிலையத்தில் பயணிகளுடன் நின்று கொண்டிருந்தன.
தறி கெட்டு ஓடிய விமானம் பிரவுன் இருந்த விமானத்திலோ அல்லது வேறு விமானங்கள் மீதோ மோதியிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
இதன் காரணமாக ஹீத்ரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. விமானங்கள் புறப்படுவது சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. ஹீத்ரூ விமான நிலையத்திற்கு வந்த சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
சில மணி நேர தாமதத்திற்குப் பின்னர் கார்டன் பிரவுன் சீனா புறப்பட்டுச் சென்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications