பிப். 13ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு: ஜெ.

சமீபத்தில்தான் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்ைத ஜெயலலிதா கூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 13ம் தேதி (புதன்கிழமை) சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
இதுதொடர்பாக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் தங்கள் அழைப்பிதழுடன் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களில் அடுத்த தேர்தலில் அதிமுக அமைக்கப் போகும் கூட்டணி குறித்த முக்கிய முடிவுகளை ஜெயலலிதா அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.பி.அன்பழகன் நீக்கம்:
இதற்கிடையே, முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பை வகித்து வந்தவருமான கே.பி.அன்பழகனை அப்பதவியிலிருந்து தூக்கியுள்ளார் ஜெயலலிதா.
அவருக்குப் பதில், ஊத்தங்கரை பஞ்சாயத்து யூனியன் தலைவர் கே.ஈ.கிருஷ்ணமூர்த்தியை மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications