தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை: அன்புமணி
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பறவை காய்ச்சல் இல்லை. இங்கு பறவைக் காய்ச்சல் வராது. எனவே யாரும் பயப்படத் தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மேற்கு வங்க மாநிலத்தின் இரு மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால் நாடு முழுவதிலும் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், சீனா, மியான்மர் உட்பட பல நாடுகளில் இருந்து இடம் பெயறும் பறவைகள்தான் பறவைக் காய்ச்சலைப் பரப்பும் எச்5என்1 வைரஸை பரப்பி வருகின்றன.
இந்த பறவைக் காய்ச்சல் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். இது மேலும் பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் சேர்ந்து அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவ வாய்ப்பே இல்லை. அதனால் யாரும் பயப்பட வேண்டாம் என்றார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications