For Quick Alerts
For Daily Alerts
Just In
தைப்பூசத்திற்கு வந்த புது மாப்பிள்ளை பஸ் மோதி சாவு
வீரவநல்லூர்: முன்னீர்பள்ளம் அருகே அரசு பஸ் மோதி, தைப் பூச விழாவுக்காக வந்த புது மாப்பிள்ளை பலியானார்.
வீரவநல்லூர் அருகே கீழக்குளத்தை சேர்ந்தவர் அய்யாவு மகன் ராதாகிருஷ்ணன். இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இவர் திருச்செந்தூரில தைப்பூச திருவிழா நடப்பதையொட்டி மாலை போட்டு விரதம் இருந்து வந்தார். பின்னர் முருக பக்தர்களுடன் பாதயாத்திரை புறப்பட்டார்.
முன்னீர்பள்ளம் அருகேயுள்ள சுப்ரமணியபுரம் அகதிகள் முகாம் பகுதியில் நடந்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது அம்பையில் இருந்து நெல்லைக்கு வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் ராதாகிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments
Story first published: Monday, January 21, 2008, 11:33 [IST]