கலாம் தவறவிட்ட பை-மீட்டு தந்த போலீஸ்
மதுரை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெங்களூரில் விட்டுச்சென்ற பையை போலீசார் மீட்டு அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
பெங்களூரில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அப்துல் கலாம் விமானம் மூலம் மதுரை சென்றார்.
தனது அண்ணனின் பேரன் திருமண விழாவிற்காக சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு மதுரையில் இருந்து காரில் கிளம்பினார்.
வழியில் தனது பையை தவறவிட்டதை கலாம் உணர்ந்தார். இதையடுத்து மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் மதுரையில் கலாம் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் தேடியும் பை கிடைக்கவில்லை.
இதையடுத்து பெங்களூர் போலீசாருக்கு இந்த தகவலை தெரிவித்தனர். அவர்கள் தேடலில் ஈடுபட்டபோது, பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்ல கார் மூலம் விமான நிலையம் சென்றபோது அந்த காரில் கலாம் பையை தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பையை மீட்டு தனி கார் மூலம் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தப் பையில் கலாமின் செல்போன், டைரி, கால்குலேட்டர் மற்றும் அவரது அண்ணன் பேரன் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்கள் இருந்தன.












Click it and Unblock the Notifications