தனிக்குடித்தனம் செல்ல மறுத்த தம்பியைக் கொன்ற அண்ணன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தனிக்குடித்தனம் செல்ல மறுத்த தம்பியை அண்ணனே அடித்துக் கொலை செய்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. டிரைவரான கோவிந்தராஜின் தம்பி தங்கராஜ். இவர் பெயிண்டராக உள்ளார். சமீபத்தில் தான் தங்கராஜுக்கு திருமணம் நடந்தது.
திருமணமான பின்னரும் கோவிந்தராஜுடனேயே அவர் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். ஆனால், தம்பியை தனிக்குடித்தனம் செல்லுமாறு கோவிந்தராஜ் கூறி வந்தார். ஆனால், அந்த வீடு இருவருக்கும் பொதுவான சொத்து என்பதால் தனிக்குடித்தனம் செல்ல தங்கராஜ் ஒப்புக் கொள்ளவில்லை.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டு வந்தது. நேற்றும் சண்டை வந்தபோது தம்பியை அண்ணன் கீழே அடித்தார். இதில் மண்டை உடைந்து தங்கராஜ் அங்கேயே பலியானார். இதையடுத்து கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications