போதையில் வாலிபரை வெட்டி கொன்ற நண்பர்கள்
தூத்துக்குடி: குடிபோதையில் நண்பரையே வெட்டிக் கொன்றது ஒரு கும்பல்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் தங்கபாண்டியன்.
இவர் தனது நண்பர்கள் சங்கர், மாரிமுத்து, அருள்முருகன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கு ஏறியதும் அருள் முருகன் ஊர்மக்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனை சங்கர், மாரிமுத்து தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சங்கரும், மாரிமுத்துவும் அரிவாளால் அருள்முருகனை வெட்ட முயன்றுள்ளனர். ஆனால் தப்பி ஓடிய அவர் ஊர் தலைவர் வீட்டிற்குள் ஓளிந்து கொண்டார். அவரை வெட்ட இருவரும் துரத்தி சென்றனர்.
அப்போது குறுக்கே புகுந்த தங்கபாண்டியன் அவர்களைத் தடுத்தார். ஆத்திரப்பட்டு வீணாக கொலை பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அவர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சங்கரும், மாரிமுத்துவும், தங்கப்பாண்டியனை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.












Click it and Unblock the Notifications