சென்னையில் 25ம் தேதி அரிசி கண்காட்சி
சென்னை: சென்னையில் வரும் 25ம் தேதி அரிசி உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில் அரிசி தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறவுள்ளது.
தமிழக அனைத்திந்திய ரைஸ் மில்கள் சங்க கூட்டமைப்பு மர்றும் தஞ்சை நெல் பதன ஆய்வு மையம் ஆகியவற்றின் சார்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் அரிசி குறித்த கருத்தரங்கமும் இடம்பெறுகிறது.
8வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி வரும் 25ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும்.
இந்தியாவில் கடந்த ஆண்டை விட அரிசி உற்பத்தி 5 சதவீதம் குறைந்துள்ளது. தேவை அதிகரித்துவரும் வேளையில் நவீன யுக்திகளை கையாள்வதுடன் அதிக விளை நிலங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்திய விவசாய முன்னணி நிறுவனங்கள், வேளாண்மை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.
இக்கண்காட்சியில் அரிசி மில் சாதனங்கள், விவசாய கருவிகள், ஆய்வகக் கருவிகள், பாய்லர்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் வைக்கப்படுகின்றன.
இங்கு சீனா, தாய்லாந்து, ஜப்பான், கொரியா நாடுகள் தங்கள் அரங்குகளை வைக்கவுள்ளனவாம்.