மோசடி இ மெயிலால் பல ஆயிரம் பண மோசடி

Subscribe to Oneindia Tamil


நாகை: நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், மோசடி இ- மெயிலை நம்பி பல ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.

நாகை மாவட்டம், கொள்ளிடம் கண்ணாங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52). இவர் மஸ்கட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஒரு இ மெயில் வந்தது. அதில், ஒரு மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் (ரூ 80 ஆயிரம்) அனுப்பினால் ரூ 8 கோடி கிடைக்கும் என தெரிவிக்கப்படிருந்தது.

8 கோடி வருகிறதே என்று ஆசைப்பட்ட பாலசுப்பிரமணியன் அந்த இ -மெயிலில் குறிப்பிட்ட படி ரூ 80 ஆயிரத்தை வங்கி மூலம் நைஜீரியாவில் உள்ள ஆப்ரிக்கன் டெவலப்மெண்ட் வங்கிக்கு செலுத்தினார்.

இதையடுத்து உங்களுக்குரிய ரூ 8 கோடி பணம், மயிலாடுதுறையில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள உங்களது கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பதில் வந்தது.

இதனால் குஷியானார் பாலசுப்ரமணியன். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஆகியும் குறிப்பிட்டபடி ரூ 8 கோடி பணம் வரவில்லை. அதனால் மீண்டும் இ - மெயில் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் பதில் இல்லை.

இதனால் பாலசுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து யாரிடம் புகார் கொடுப்பது. அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தெரியாமல் பாலசுப்பிரமணி பெரும் குழப்பமடைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+