பாக்யராஜ் மகள் நடிகை சரண்யா தற்கொலைக்கு முயற்சி?

Subscribe to Oneindia Tamil


சென்னை: இயக்குநர் பாக்யராஜின் மகளும், நடிகையுமான சரண்யா பாக்யராஜ் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறியுள்ளார்.

இயக்குநர் பாக்யராஜ் - நடிகை பூர்ணிமா தம்பதியினரின் மகள் சரண்யா. பாரிஜாதம் படத்தின் மூலம் இவர் நடிகையானார். அதன் பிறகு அதிக படங்களில் நடிக்காத சரண்யா, திக் திக் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நேற்று சரண்யா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார். ஆபத்தான நிலையில் இருந்த சரண்யாவை பாக்யராஜ் குடும்பத்தினர் அவசர அவசரமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தோல்வியின் விளைவாகவே, சரண்யா இப்படி ஒரு முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த இரு மாதங்களில் சரண்யா மேற்கொண்ட மூன்றாவது தற்கொலை முயற்சி இது என்றும் சரண்யாவின் தோழிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதை பாக்யராஜ் மறுத்துள்ளார். தனது மனைவி பூர்ணிமா தான் உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியதாகவும் சரண்யா குறித்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+