அரசு ஆலைக்கு திடீர் மூடு விழா-தொழிளாளர்கள் அதிர்ச்சி!!
கரூர்: கரூர் அருகே செயல்பட்டு வந்த அரசு ஆலை தீடீரென மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், மாயனூரில் தமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ் ஆலை உள்ளது. இந்த ஆலை 1984ம் ஆண்டு துவக்கப்பட்டது. அப்போது 225 பேர் பணியாற்றி வந்தனர்.
ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் தயாரிக்க தேவையான கல் நார் அழுத்த குழாயும் இங்கு தயாரிக்கப்பட்டு வந்தது. மேலும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தேவையான அனைத்து குழாய்களையும் இங்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.
ஆனால், நாளைடைவில் தனியாரிடமும் குழாய்களை வாங்கலாம் என அரசு அறிவித்ததால் இந்த ஆலை நலிவடைந்துவிட்டது.
இதனால் இந்த ஆலையில் பணியாற்றி வந்த 118 ஊழியர்கள் கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் விருப்ப ஓய்வு பெற்றுச் சென்று விட்டனர். இங்கு பணிபுரிந்து வந்தவர்களில் 54 பேர் மாற்று பணியிடம் கேட்டு போராடி வந்தனர்.
இந் நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது ஆலை மூடப்பட்டதாக மெயின் கேட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications