யுஎஸ் வட்டி விகிதம் குறைப்பு-இந்திய பங்குச் சந்தைகள் மீள்கின்றன

(Federal Reserve) வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதையடுத்து உலகம் முழுவதுமே பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு கொஞ்சம் சீர்பட ஆரம்பித்துள்ளது.
கடந்த இரு நாட்களாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெரும்பாலான (சில ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தவிர) பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு படுமோசமான இழப்பு ஏற்பட்டது.
திரும்பி வராத வீட்டுக் கடன்களால் அமெரிக்க வங்கிகளுக்கும் அந் நாட்டின் பொருளாதாரத்துக்கும் கடும் நஷ்டம் உருவாகியுள்ள நிலையில் அமெரிக்க பொருளாதாரத்திலும் தேக்க நிலை உருவாகி வருகிறது.
இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது. இந் நிலையில் நேற்று அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 3.5 சதவீதமாகக் குறைத்தது. (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிக்கான வட்டி விகிதம் இது). இதன்மூலம் வங்கிகளிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக உலகம் முழுவதுமான பங்குச் சந்தைகளில் இன்று நிலைமை கொஞ்சம் சீரானது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் இன்று காலை 17,218 புள்ளிகளைத் தொட்டது (இது நேற்று 16,729 புள்ளிகளாக இருந்தது). அதே போல தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியிலும் குறியீட்டு எண் 5,029 ஆக உயர்ந்தது (இது நேற்றைய நிலையை விட 2.92 சதவீத வளர்ச்சியாகும்).












Click it and Unblock the Notifications