திண்டுக்கல் டி.எஸ்.பி. பொறுப்பு ஏற்கும் முன்பே டிரான்ஸ்பர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் டி.எஸ்.பி பொறுப்பை ஏற்கும் முன்பே அவர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த போஸ் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர் பெற்று திருச்சி மது விலக்கு பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காலியாக இருந்த திண்டுக்கல் டி.எஸ்.பி. பணியிடத்திற்கு பலத்த போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் கியூ பிரிவு டி.எஸ்.பி. சேதுராமன் திண்டுக்கல் நகர டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார்.
இத்தகவல் அறிந்த சில போலீஸ் அதிகாரிகள் கோட்டை வரை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி அந்த பதவிக்கு வர துடித்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்க இருந்த சேதுராமனை முசிறி டி.எஸ்.பி.யாக அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் தற்போது திண்டுக்கல் டி.எஸ்.பி. பணி இடம் காலியாக உள்ளது.
திண்டுக்கல் டி.எஸ்.பி. பணியிடத்தை பிடிக்க சில போலீஸ் அதிகாரிகள் தங்களது செல்வாக்கை கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர். இதில் வெற்றி பெறப் போவது யார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.