சிறையில் ரகசிய ஆலோசனை - 5 கைதிகள் இடமாற்றம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருப்பதற்கு ரகசிய ஆலோசனை நடத்திய 5 கைதிகள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
மேலப்பாளையத்தில் நடந்த முஹர்ரம் பண்டிகை ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்த தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த சிலர் திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில், பஷீர் சேக் அப்துல்காதர், இப்ராகிம், பாதுஷா, முகமது கவுஸ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் ஏற்கனவே உள்ள தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களோடு இவர்களை காவலில் வைக்காமல் தனி பிளாக்கில் அடைத்தனர்.
இதற்கு அவர்கள் 5 பேரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தங்களை தடை செய்யப்பட்ட இயக்கத்தினரின் பிளாக்கில் அடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதற்கு இவர்கள் திட்டமிட்டனர்.
இதனையடுத்து சிறை உயரதிகாரிகள் அந்த ஐந்து பேரையும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றி விட்டனர்.












Click it and Unblock the Notifications