நெல்லை பெண் போலீஸாருக்கு கமாண்டோ பயிற்சி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 300 ஆண், மற்றும் 41 பெண் போலீசாருக்கு தீவிரவாதிகளை எதிர்கொண்டு தாக்குவதற்கான சிறப்பு காமண்டோ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பாளை ஆயுதப்படை மைதானத்தில் இந்த பயிற்சி நடந்து வருகிறது. ஏ.கே 47 துப்பாக்கிகளை பயன்படுத்தும் விதம், கண்ணிவெடி தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி, பதுங்கி குழிகள் அமைப்பது, மற்றும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆபரேசன் பிரிவு ஐ.ஜி அசுதோஸ் சுக்லா உத்தரவின்பேரில் நெல்லை மாவட்ட எஸ்பி ஸ்ரீதர் மேற்பார்வையில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது.
சென்னை சிறப்பு கமாண்டோ படை பிரிவை சேர்ந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டு மற்றும் 13 போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர்.
பயிற்சி முடித்த பின் இவர்கள் பிரதமர், முதல்வர் போன்ற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications