மேலும் ஒரு இந்தியர் தற்கொலை
துபாய்: துபாயில், இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சமீப காலமாக வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் சந்திரன் பிள்ளை (54). இவர் துபாய், ஜபேல் அலி பகுதியில் உள்ள ரோமியோ டெக்கார் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சனிக்கிழமை தனது முகாமில் உள்ள அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சந்திரன். மின்விசிறியில் தூக்குப் போட்டு சந்திரன் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை சந்திரனும், அவருடன் தங்கியிருக்கும் மற்றொருவரும் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளனர். அவர்களுடன் மேலும் இரு சக தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அப்போது சந்திரன் நார்மல் ஆகத்தான் இருந்துள்ளார்.
சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு எழுந்த சந்திரன், தனது காலை உணவை முடித்துள்ளார். வழக்கம் போல அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் பேருந்து சந்திரன் உள்ளிட்ட தொழிலாளர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளது. ஆனால் வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் சந்திரன்.
பின்னர் மாலையில் மற்ற தொழிலாளர்கள் முகாமுக்குத் திரும்பியபோது, சந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
ஒரு வருடத்திற்கு முன்புதான் சந்திரன் வேலையில் சேர்ந்துள்ளார். எப்போதும் மகிழ்ச்சிகரமாகவே காணப்படுவாராம்.
இந்த நிலையில் சமீபத்தில் சந்திரனுக்கு அவரது மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், சந்திரனின் மகள் தனது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கவலை அடைந்தார் சந்திரன். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications